MENU BAR

Monday 2 July 2012

மைதா – விலை கொடுத்து வாங்கும் ஆபத்து ?


மைதா விலை கொடுத்து வாங்கும் ஆபத்து ?



       மைதா என்பது நன்கு அரைக்கப்பட்ட கோதுமை மாவு. மஞ்சள் நிறத்தில் இருக்கும் ‘ பென்சாயில் பெராக்சைடு ‘ என்ற ரசாயனம் கொண்டு வெண்மை ஆக்க்படுகிறது. அதுவே மைதா மாவாகும். நம் தலை முடியை கருபாக்கப் பூசும் டையில் இருப்பது இந்த ரசாயனம்தான். மாவை மிருதுவாக்க ‘ ஆலோக்ஷான்’ என்ற ரசயனமும் கலக்கபடுகிறது. ஆபத்து என்ன ?

        மைதாவில் கோதுமையின் நார்ச் சத்து கிடையாது. நம் செரிமான சக்திக்கு நார்ச்சத்து அவசியமலானது. ஆகவே மைதா நம் ஜீரண சக்தியை குறைத்து விடும். மைதா மாவில் உள்ள protein உடன் பென்சாயில் பெராக்சைடு சேர்ந்து சர்க்கரை நோயிற்கு காரணியாக அமைகிறது. ஆலோக்ஷா சோதனை கூடத்தில் எலிகளுக்கு சர்க்கரை நோய் வர வைப்பதுற்காக பயன்படுத்தும் ரசயனமாகும். ஆகவே இது மனிதனுக்கும் சர்க்கரை நோய் வர துணை புரிகறது.

       நார்சத்து அற்ற இந்த மைதா எளிதில் ஜீரணம் ஆவதில்லை . இவற்றை இரவில் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இந்த மைதவால் செய்ய படும் உணவு வகைகளை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

தடை விதிப்பு:
      
       ஐரோப்பா , சீனா , இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மைதா பொருட்கள் விற்கத் தடை விதிகபட்டுளுது. நமது அண்டை மாநிலமான கேரளா வில் மைதா வின் தீமை பற்றி பிரசாரம் செய்ய தொடங்கி விட்டனர்.

No comments:

Post a Comment