MENU BAR

Wednesday 16 October 2019

15.10.2019 IT அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

10அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் ஆர்ப்பாட்டம்..

தோழியர்களே ! தோழர்களே !
புதிய பென்ஷன் திட்டத்தை கைவிடுதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்த மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறைகூவல் விடுத்துள்ளது.

முதற் போராட்டமாக கீழ்கண்ட இயக்கம் வெற்றிகரமாக நடைபெற்றது.

தேதி : 15.10.2019
நாள் : செவ்வாய்க்கிழமை
இடம் : வருமான வரி அலுவலகம், ஈரோடு
காலம் : மதியம் 1 மணி
இயக்கம் : மாபெரும் ஆர்ப்பாட்டம்

கூட்ட தலைமை : தோழர். ரோஹித் குமார், தலைவர்,ITEF,ஈரோடு.

ஆர்ப்பாட்ட உரை :
தோழர். P. சேகர், செயலர், ITEF, ஈரோடு.

தோழர். N. ராமசாமி , செயலர், மத்திய அரசு ஊழியர் ஒருங்கிணைப்புக் குழு.

தோழர். N. கார்த்திகேயன், அமைப்புச் செயலர், NFPE P3,ஈரோடு.

தோழர். R. அலெக்ஸ் சாம்ராஜ், செயலர், ஈரோடு RMS.

ஆர்ப்பாட்ட கோஷங்களை முன்னெடுத்தவர் :
தோழர். K. சுவாமிநாதன், உதவி செயலர், NFPE P3, ஈரோடு.

ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பங்கேற்றோர் :
அஞ்சல் ஊழியர் ஓய்வூதிய சங்க தோழர். V. K. பழனிவேல் , ஈரோடு வருமான வரி அலுவலக ITEF தோழமைகள், ஈரோடு அஞ்சலக NFPE மற்றும் அஞ்சல் RMS தோழமைகள் உள்ளிட்டோர்.

நன்றியுரை:
தோழர். குமார், ITEF, ஈரோடு.

தோழமையுடன்,
ஈரோடு NFPE P3.

குறிப்பு:
ஆர்ப்பாட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அனைவரின் பார்வைக்கும் கீழே பதிகின்றோம்.









No comments:

Post a Comment