MENU BAR

Saturday 13 February 2016

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை - வங்கி ஊழியர்கள் சங்கமித்த கருத்தரங்கம்… ஈரோட்டில்…. 11.02.2016 ல்:-


ஈரோட்டில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் மத்திய , மாநில அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் , பல்கலைக்கழக ஆசிரியர்கள் , பொதுத்துறை மற்றும் வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 11.02.2016 ல் ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் வெற்றிகரமாக நடந்தது.

தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் தோழர் க. சுவாமிநாதன் "பொதுத்துறை பாதுகாப்பும் - 7-வது ஊதியக்குழுவும்" என்ற தலைப்பிலும் , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் தோழர் ஆதவன் தீட்சண்யா பண்பாடு - கலாச்சாரம்-நாகரீகம்" என்ற தலைப்பிலும் சிறப்பான உரையாற்றினர்.

250 க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்ற இக்கருத்தரங்கில் நமது NFPE  நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களென பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இக்கூட்டமைப்பை தொடர்ந்து வலுமிக்கதாக செயல் படுத்துவதெனவும் , அவ்வப்பொழுது இது போன்ற கருத்தரங்கங்கள்  நடத்துவதெனவும் , 10.02.2016 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தி வரும் தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்களின் 20 அம்ச  கோரிக்கைகளின் மீது அரசு பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு  காண வேண்டும் என்றும் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது .





No comments:

Post a Comment