MENU BAR

Thursday 4 February 2016

30.01.2016 ல் பணி ஓய்வு பெற்ற தோழர்களுக்கு வாழ்த்துக்கள் : -


1)  07.10.1974 அஞ்சல் இலாகாவில் PA வாகப் பணியில் சேர்ந்த தோழர் K.C.ஈஸ்வரமூர்த்தி அவர்கள் ஈரோடு தலைமை அஞ்சலகம், வீரப்பன் சத்திரம், ஈரோடு கலெக்டரேட்  முதலிய அலுவலகங்களில் பணி புரிந்துள்ளார். WLI ஆகவும் பணி புரிந்துள்ளார். ஈரோடு தலைமை அஞ்சலக APM (RD Counter) ஆகப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் தொழிற்சங்கப் பணிகளில் தன்னை முழமையாக ஈடுபடுத்திக் கொண்டவரும் ஆவார். இவரது பணி ஓய்வுக்காலம் வளமுடன் அமைய வாழ்த்துக்கள்.  
  
2)   18.12.1985 ல் நமது இலாகாவில் எழுமாத்தூர் BO வில் BPM ஆகப் பணியில் சேர்ந்த தோழர் R.சாமிநாதன் அவர்கள் 10.06.1996 ல் POSTMAN ஆகப் பதவி உயர்வு பெற்று ஈரோடு தலைமை அஞ்சலகத்தில் பனி புரிந்த இவர் பவானி உட் கோட்டத்தில் Mail Overseer ஆகவும் பணி புரிந்துள்ளார். ஈரோடு கோட்ட NFPE P4 சங்க செயலராகவும் சிறப்பாகப் பணி செய்து அனைத்துப் போராட்டங்களிலும் முழமையாகப் பாடு பெற்ற இவர் ஈரோடு தலைமை அஞ்சலக CASH Overseer ஆக இருந்து பணி ஓய்வு பெற்றுள்ளார். இவரது பணி ஓய்வுக் காலம் வளமுடன் அமைய வாழ்த்துக்கள். 

3) நமது இலாகாவில் பட்டம்பாளையம் BO வில் 22.01.1974-ல் BPM ஆகப் பணியில் சேர்ந்த தோழர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 19.11.2012 அன்று MTS ஆகப் பதவி உயர்வு பெற்று கோபி தலைமை அஞ்சலகம், நம்பியூர் துணை அஞ்சலகம், குன்னத்தூர் துணை அஞ்சலகம் ஆகிய அலுவலங்களில் பணியாற்றி உள்ளார். தொழிற்சங்க இயக்கங்களிலும் , வேலை நிறுத்தங்களிலும் முழுமையாகக் கலந்து கொண்டுள்ளார். ஈரோடு கலெக்டரேட் அலுவலகத்தில் MTS ஆகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது பணி ஓய்வுக் காலம் வளமுடன் அமைய வாழ்த்துக்கள்.
 ********************************************************************************************
ஈரோடு தலைமை அஞ்சலகத்தின் மன மகிழ் மன்றம் சார்பாக 01.02.2016 ல் நடைபெற்ற தோழர்  K.C.ஈஸ்வரமூர்த்தி    மற்றும்  தோழர் R.சாமிநாதன்    ஆகியோரின் பணி ஓய்வு பாராட்டு விழா புகைப்படங்கள் :





"உழைக்கும் வர்க்கம்" இதழ் வளர்ச்சி நிதி அளித்த தோழர்கள்:-



 
 

No comments:

Post a Comment