MENU BAR

Thursday 19 February 2015

250 தோழர், தோழியர்கள் எழுச்சியோடு கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம்

தமிழ் மாநில NFPE P3, GDS சங்கங்களின் அறைகூவலுக்கு இணங்கவும், மத்திய அஞ்சல் JCA அறைகூவலுக்கு இணங்கவும், 17-02-2015 மாலை ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு FNPO,P3 கோட்ட செயலர் J. பாலா மோகன் ராஜ் மற்றும் NFPE P4, கோட்ட தலைவர் C.M. ரங்கசாமி ஆகியோர் தலைமையில்  மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தோழர்கள் K. சுவாமிநாதன் P3 செயலர், ஈரோடு கோட்டம், N.செல்வராஜ் செயலர், FNPO GDS ஈரோடு கோட்டம், M. மகாலிங்கம், செயலர், NFPE GDS பவானி கிளை, S. நடராஜன், NFPE GDS,  ஈரோடு கோட்டம், R.கிருஷ்ணமூர்த்தி, தலைவர், NFPE P3, கோபி கிளை, மனோகரன், கோட்ட தலைவர், FNPO P4, A. எழில்வாணன், NFPE P3 , செயலர், பவானி கிளை, K. பச்சியப்பன் NFPE P3 ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினர்.
தோழர் S.தங்கவேல் GDS NFPE கோபி, கோசங்கள் எழுப்ப, தோழர். S. செல்லமுத்து, NFPE, ERODE நன்றி உரை நிகழ்த்தினார்.
250 க்கும் மேற்பட்ட NFPE, FNPO தோழர்கள், ஈரோடு, பவானி, கோபி பகுதிகளிலிருந்து திரளாக வந்திருந்தது கோரிக்கைகளின் நியாயத்தை உணர்த்தியது. இனிவரும் அடுத்த கட்ட போராட்டங்களிலும் தோழர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்.  

No comments:

Post a Comment