MENU BAR

Saturday 28 February 2015

தோழர் K.பச்சியப்பன் இலாகா பணி நிறைவு




22.4.1974 -ல் நமது இலாகா பணியில் சேர்ந்த  தோழர் K. பச்சியப்பன் 1986-ல் இருந்து பவானி NFPE-P3 கிளைச் செயலர் மற்றும் தலைவர் பொறுப்புகளில் இருந்து செயல்பட்டார். பவானி கிளை மட்டுமல்லாது ஈரோடு கோட்ட கிளை, கோபி கிளை செயல்பாடுகளிலும் உறுதுணையாக இருந்து சிறப்பான தொழிற் சங்க பணியைச் செய்தவர். பவானி கிளையில் NFPE சங்கத்தை முதன்மை சங்கமாக (மாற்று சங்க உறுப்பினர்களே இல்லை எனும் அளவுக்கு ) தொடர்ந்து வைத்திருந்தார்.

கடந்த அக்டோபர் 2012 ஈரோடு தலைமை  அஞ்சலகத்தில் APM பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பணி  ஓய்வு  பெரும் இன்றைய நாளில் DY- Postmaster ஆக பணி ஓய்வு பெறுகிறார். கடந்த முறை மாநில சங்கத்தில் அமைப்பு செயலராக இருந்து சிறப்பாக செயல்பட்டார். தற்பொழுது மாநில சங்கத்தில் Supreme Councillor பொறுப்பில் இருந்து சிறப்பாக பணியாற்றி வந்தவர். ஈரோடு தலைமை அலுவலகம் வந்த பிறகு , ஈரோடு P3 கோட்ட கிளையின் செயல்பாடுகளில் சிறப்பான ஒத்துழைப்பு நல்கி வந்தார்.

முன்னால் அகில இந்திய பொது செயலர் தோழர் K.V .ஸ்ரீதரன்  மற்றும் இன்றைய NFPE-P3 அகில இந்திய பொது செயலர் தோழர் N.சுப்ரமணியம் ஆகியோரின் உற்ற நண்பருமான நமது தோழர் K.பச்சியப்பன் , அவர்களின் வழிகாட்டுதலில் தனது தொழிற்சங்க பணியை மெருகேற்றி கொண்டர்.

இன்று பணி ஓய்வு பெரும் தோழர்  K.பச்சியப்பன் (9894437337) அவர்களுக்கு ஓர் மகனும் ஓர் மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடித்துள்ளார். இவரது பணி ஓய்வு காலம் வளமுடன் அமைய ஈரோடு, பவானி மற்றும் கோபி கிளைகளின் P3,P4,GDS  சங்கங்களின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


No comments:

Post a Comment