MENU BAR

Tuesday 30 April 2013

பணி ஓய்வு பாராட்டு:



  
ஈரோடு கோட்டம் சென்னிமலை SO வில் GRADE I போஸ்ட் மாஸ்டராக பணிபுரியும் தோழர் A . குழந்தைவேலு  அவர்கள் இன்று (30.04.2013) ல் பணி  ஓய்வு பெறுகிறார். 16.06.1975 ல் PA பவானி  ஆகப் பணியில் சேர்ந்த இவர் பிறகு திருப்பூர் கோட்டத்திற்கு பணி மாறுதலில் சென்று திரும்பவும் நமது கோட்டத்திற்கு வந்தவர். நமது அஞ்சல் மூன்று தொழிற்சங்கத்தில் முன்னணியில் இருந்து செயல்பட்டவர். மேலும் நமது மத்திய சங்க துணைப்  பொது செயலாளர்  தோழர் N. சுப்ரமணியன்  அவர்களின் நெருங்கிய நண்பர் ஆவார் .இவரது ஓய்வுகாலம் சிறப்பாக அமைய நமது கோட்ட  சங்கங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 திரு M. சண்முகம் , Senior Postmaster, Erode HPO அவர்கள்  22.04.1974 ல் PA நாமக்கல் ஆக பணியில் சேர்ந்து பல பதவி உயர்வுகளை பெற்று கடந்த 28.01.2011 ல் ஈரோடு தலைமை அஞ்சலக அதிகாரியாக பொறுப்பேற்று இன்று(30.04.2013)  பணி ஓய்வுபெறுகிறார். இவருக்கு , NFPE ஈரோடு கோட்ட சங்கத்தின் பாராட்டுக்களையும்,வாழ்த்துகளையும்தெரிவித்துகொள்கிறோம். 

மேலும் இன்று பணி ஓய்வு பெரும் அவல்பூந்துறை SPM தோழர். S.P. ஜானகிராமன் மற்றும் வேமாண்டாம் பாளையம் SPM தோழர். R. பழனிசாமி ஆகியோர்க்கும் நமது கோட்ட சங்கங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment