MENU BAR

Monday 29 July 2019

29.07.19 ஆர்பாட்டம் அஞ்சல் JCA சார்பில்

வெற்றிகரமான முதற்கட்ட போராட்டம்

தோழியர்களே ! தோழர்களே !
நமது அகில இந்திய அஞ்சல் தொழிற்சங்க  கூட்டு நடவடிக்கைக் குழு (அஞ்சல் ஊழியர் தொழிற்சங்கங்களான NFPE & FNPO இணைந்து) அறைகூவலின்படி 
காலி பணியிடங்களை நிரப்புதல், அஞ்சல் துறை சேவைகளுக்கு தனியார்மயத்தை உட்புகுத்துவதை நிறுத்துதல், அஞ்சல் தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்தல், GDS சம்பள கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை அமல்படுத்துதல்,புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட 23 பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி நாடு முழுவதும் பல்வேறு இயக்கங்களை நடத்த உள்ளது..

அதில் முதற்கட்ட இயக்கமாக 29.07.2019 திங்கள்கிழமை அன்று நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் கோட்டங்களிலும்  உணவு இடைவெளி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு கோட்டத்தை பொறுத்தமட்டில் ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு மதியம் 1 மணியளவில் ஈரோடு/பவானி/கோபி பகுதியில் உள்ள அஞ்சல் ஊழியர்கள் 30க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று இருந்தனர்.

ஈரோடு கோட்ட NFPE தலைவர் செல்லமுத்து அவர்கள் தலைமையேற்று நடத்த, கோட்ட NFPE துணை செயலர் சுவாமிநாதன் முக்கிய கோரிக்கைகள் பற்றி விவரிக்க, கோட்ட தலைவர் செல்லமுத்து அவர்களுடன் இணைந்து அனைவரும் பலத்த கோஷங்கள் எழுப்ப ,இறுதியாக FNPO தோழர் நசீர் அவர்கள் நன்றியுரை வழங்க ஆர்ப்பாட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது..

அடுத்த கட்ட போராட்டமாக நாடு முழுவதும் அனைத்து கோட்ட அளவில், மாநில அளவில் தர்ணா போராட்டங்கள் நடைபெற இருக்கின்றது...

கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் காலவறையற்ற வேலைநிறுத்த போராட்டங்களிலும் அஞ்சல் ஊழியர் சங்கங்கள் இறங்க எத்தனித்து உள்ளன...

தோழமையுடன்,
ஈரோடு NFPE P3.

குறிப்பு:
29.07.19 ஆர்ப்பாட்டத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் அனைவரின் பார்வைக்கும் கீழே பதியப்படுகின்றது.






















ஓங்குக ஊழியர் ஒற்றுமை...!
வெல்க அவர்தம் கோரிக்கை...!

அகில இந்திய அஞ்சல் JCA வின் அறைகூவல்

பொருள்:5/5

🚩 *உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்* 🚩

தோழமைகளே...

ஒன்று கூடுங்கள் ..
நமது தலைமை அஞ்சலகத்திலே....🚩🚩🚩

👇👇👇
இயக்க அறைகூவல் :
*அகில இந்திய அஞ்சல் JCA (NFPE & FNPO)*

கோரிக்கைகள் :
*23கோரிக்கைகள் பற்றிய விபரம் இந்த பதிவின் இறுதியில் குறிப்பிட்டுள்ளோம்*

முதற் கட்ட போராட்டம் :
*உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்*

தேதி :
*29.07.2019 திங்கள்கிழமை*

நேரம் :
*மதியம் 1 மணி*

பங்கேற்கும் சங்கங்கள்:
*NFPE (P3, P4 & GDS) மற்றும்*
*FNPO(P3, P4 & GDS) ஈரோடு கோட்டம்*



தோழமையுடன்,
ஈரோடு NFPE P3🚩



*குறிப்பு* :

📌 *அடுத்தகட்ட போராட்ட அறிவிப்புகள்*
2ஆம் கட்டம் :
*21.08.19* ஈரோடு DO முன்பு தர்ணா போராட்டம்🚩
3ஆம் கட்டம் :
*11.09.19* அன்று
சென்னை CO முன்பு தர்ணா போராட்டம்🚩
4ஆம் கட்டம்:
*04.10.19* டெல்லியில் தர்ணா போராட்டம்🚩

📌 அகில இந்திய அளவில் இந்த போராட்ட இயக்கங்களை *NFPE&FNPO இணைந்து*  எடுத்து செல்லும்

📌 போராட்டத்தின் முக்கிய எதிர்பார்பான 23 கோரிக்கைகள் அடங்கிய File கீழே பதியப்பட்டுள்ளது
👇👇👇
*CHARTER OF DEMANDS*

1. Settle all the problems arisen out of implementation of C.S.I, R.I.C.T./ IPPB /
CBS & CIS
2. Implement all positive recommendations of Sri Kamlesh Chandra Committee
report and grant Civil servant Status to GDS.
3. Fill up all Vacant Posts in all cadres of Deptt of Post i.e P.A/S.A, Postmen, Mail
Guard , Mailmen, MMS, MTS, GDS, Postal Acctts, P.A Admn Offices, P.A
SBCO & Civil Wing etc within a time frame and separate identity of all cadres.
4. Withdraw NPS and Guarantee minimum pension 50% of last pay drawn.
5. Membership verification of G.D.S and declaration of result of regular
employees membership verification conducted in 2015.
6. Implementation of orders of payment of revised wages and arrears to the
casual , Part time, Contingent employees & daily rated mazdoors as per 6
th and
7
th CPC and Regularize Services of casual Labourers.
7. Implement Cadre Restructuring for left out categories i.e RMS, MMS,
Postman/MTS, PACO, PASBCO, Postal Accounts, and Civil Wing etc.
8. Stop Privatization, Corporatization and out sourcing in Postal Services.
9. Scrap Bench Mark in MACP .
10. Implement 5 days week in Postal and RMS
11. Enhancement of higher pay scales to those categories whose minimum
qualification has been enhanced e.g Postmen, Mail guard.
12. Grant of pension to the promoted GDS based on Supreme Court Judgement in
SLP No (C) 13042/2014
13. Withdraw orders of enhancement of cash conyance limit without security.
14. Implement all High Court and Supreme Court decisions in C/W MACP, RTP and
others.
15. Cash less treatment under CGHS and allotment of adequate fund under head
MR & T.A
16. Retention of Civil wing in the Deptt of Post.
17. Holding of Deptt Council Meetings and periodical meetings at all levesl.
18. Stop Trade Union victimization and in the name of unscientific targets.
19. Provide 40 percent SCF quota promotion in AAO cadre and amend RR
incorporating the modifications demanded by AIPAEA.
20. Status of audit to SBCO.
21. Restore Special Allowance to PO & RMS Accountants and OSA to RMS/MMS
Staff.
22. All NSH and I.C. Speed Post Hubs should be under the administrative control
of RMS and All L-2 Mail Offices should be identified as I.C. Speed Post Hubs
and as Parcel Hubs.
23. Permission to all Staff of Circle Office , SBCO, Postal Accounts and RMS/MMS
Staff to appear in Departmental Examination for promotion to PSS Group-B.
🚩🚩🚩🚩🚩🚩🚩

20.07.19 செயற்குழு முடிவுகள்

🚩 *செயற்குழு கூட்ட முடிவுகள்* 🚩

தோழமைகளே..
*20.07.2019* அன்று மாலை 6:30 மணியளவில் ஈரோடு தலைமை அஞ்சலக மனமகிழ் மன்ற அறையில், நமது கோட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது..

*கூட்ட தலைமையை நமது கோட்ட தலைவர் தோழர். செல்லமுத்து* அவர்கள் ஏற்று நடத்த கீழ்கண்ட பொருள்கள் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளன...

🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

1.  *நமது ஈரோடு கோட்ட சங்கத்தின் 44வது கோட்ட மாநாடு*

மாநாட்டு தேதி : *18.08.2019* (ஆவணி 1) ஞாயிற்றுக்கிழமை

இடம் :
*ஈரோடு தலைமை அஞ்சலகம்*

மாநாட்டு சிறப்பு அழைப்பாளர்கள் :
அகில இந்திய NFPE-P3 தலைவர் *தோழர். JR*
தமிழ் மாநில NFPE-P3 தலைவர்
*தோழர். செல்வகிருஷ்ணன்*
தமிழ் மாநில NFPE-P3 செயலர்
*தோழர். வீரமணி*


2. *சிவகிரி/பாசூர்/ஊஞ்சலூர் முறைகேடுகள்..*

அனைத்து case களின் தற்போதைய நிலைமை விவாதிக்கப்பட்டு வரும் வார இறுதிக்குள் கோட்ட சங்கம் மூலம்  *விரிவான அறிக்கை* ஒன்றையும் *அதிமுக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கோட்ட அளவில் போராட்ட இயக்கங்கள் நடத்துவது குறித்து கோட்ட நிர்வாகத்திற்கு கடிதம்* அளித்தல்.


3. *IPPB TARGET TORTURE*

சமீப காலங்களில் IPPB TARGET நெருக்குதல் அதிகமிருப்பதால் இதனை கண்டித்து கட்டுப்படுத்தும் விதமாக நமது *தோழமைகள் அனைவரும் தத்தம் பெயரில் ஆரம்பித்துள்ள IPPB கணக்கினை உடனடியாக close செய்து* அவரவர் எதிர்ப்பை ஒரே குரலாக எழுப்பும் வண்ணம் நமது *44வது கோட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியும்* , மேலும் இதுகுறித்து அகில இந்திய/மாநில தலைவர்களிடம் வலியுறுத்துவது.


4. *100 RTI விண்ணப்பங்கள்*

நமது துறையில் ,கோட்டத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நிர்வாகத்திடம் வெளிப்படைத் தன்மையை உறுதிபடுத்த வேண்டியும், நமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கும் நமது ஈரோடு கோட்ட சங்க உதவியுடன் நமது தோழமைகள் (100+ உறுப்பினர்கள்) அனைவரும் நிர்வாகத்தை நோக்கி ஒரே குரலாக நூற்றுக்கணக்கான RTI விண்ணப்பங்கள் அனுப்பி மூலம் தகவல் கோருவது.


5. *Postal JCA call*

நமது *அகில இந்திய Postal JCA (NFPE&FNPO)* அறைகூவலின்படி *பல்வேறு கோரிக்கைகளை* முன்வைத்து அறிவித்துள்ள *பல்வேறு போராட்ட இயக்கங்களை* நமது கோட்ட அளவில் திறம்பட நிகழ்த்துவது குறித்து..

🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

இறுதியாக  நமது கோட்ட உதவி தலைவர் தோழர். T.V.ராகவன் அவர்கள் நன்றியுரை ஆற்றி செயற்குழு கூட்டத்தை இனிதே நிறைவு செய்தார்.

தோழமையுடன்,
*ஈரோடு NFPE P3* 🚩

*குறிப்பு :*
மேலே குறிப்பிட்டுள்ள பொருள்களை பற்றிய விரிவான பதிவு விரைவில் அனைவரின் பார்வைக்காகவும் பதியப்படும்.