MENU BAR

Thursday 2 May 2013

செல்போன் டிப்ஸ்

 
 * அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்கள் எப்போது வெளியே சென்றாலும் செல்போனை எடுத்துச் செல்வது நல்லது. லிஃப்டில் பிரச்னை என்றாலோ, மேல் மாடியில் லிஃப்ட் கதவை யாராவது சரியாக மூடவில்லை என்றாலோ உடனடியாக தகவல் சொல்ல வசதியாக இருக்கும்.
  
 * செல்போனில் பாட்டரி சார்ஜ் செய்கையில் இன்டிகேட்டர் ஸ்கிரீனில் நான்கு அல்லது ஐந்து கோடுகள் காண்பிக்கும். இரண்டு கோடுகள் வந்த உடனேயே சார்ஜ் செய்துவிட்டால் கரண்ட் கட் ஆகும் நேரங்களிலும் மொபைல் ஆக்டீவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம். தேவையற்ற டென்ஷனையும் தவிர்க்கலாம்.
  
 * குடும்பத்தினர் ஒவ்வொருவரும் மற்றவர்களின் செல்போன் ஐஙஉஐ எண்ணை பதிவு செய்து தங்கள் செல்போனில் வைத்துக்கொண்டால் போன் தொலைந்து போகும் பட்சத்தில் புகார் செய்ய வசதியாக இருக்கும். 
  
 * செல்போனில் பதிவு செய்திருக்கும் எண்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்துவிடவும். தவறுதலாக அழித்துவிட்டாலோ, போன் தொலைந்துவிட்டாலோ மீண்டும் போனில் ஏற்றிக்கொள்ளலாம்.
  
 * செல்போனில் பேசியபடி நடப்பதாலும் வாகனம் ஓட்டுவதாலும்தான் அதிக அளவு விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இந்த இரண்டு செயல்களையும் தவிர்க்கவும்.
 
 * செல்போனில் தேவையற்ற கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டால் கஸ்டமர் கேருக்கு போன் செய்யும்போது,"ட்ராய்' (TRAI) அமைப்புக்கு புகார் செய்வேன்' என்று சொன்னால் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். "Telecom Regulatory Authority of India' என்பதம் சுருக்கம்தான் ட்ராய்.
 
 * செல்போனை டி.வி., ஃப்ரிட்ஜ், கம்ப்யூட்டர் போன்ற மின்சாதனப் பொருள்களின் அருகில் வைக்கக்கூடாது. பேட்டரி வீக் ஆகிவிடும்.
  
 * செல்போன்களில் நாம் உபயோகிக்காத ஆப்ஷன்களை ஆஃப் செய்து வைப்பதன் மூலம் பேட்டரியின் சக்தியை சேமிக்கலாம்.
  
  
 * செல்போனில் சார்ஜ் குறைந்து ஒரு கோடு இருக்கும்போது பேசக்
 கூடாது. அப்போது அதில் ஆயிரம் மடங்கு கதிர்வீச்சு வெளிப்படும். 

 
 
Thanks to Dinamani

No comments:

Post a Comment