MENU BAR

Thursday 11 July 2013

சென்னையில் அஞ்சல் நான்கின் உண்ணாவிரதப்போராட்டம்

சென்னை CPMG அலுவலக வளாகத்தில் நடைபெற்ற உண்ணா விரதப் போராட்டத்திற்கு NFPE அஞ்சல் நான்கின் அகில இந்திய அமைப்புச் செயலர் தோழர் கோபு. கோவிந்தராஜன் மற்றும் FNPO அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர். குணசேகரன் கூட்டுத் தலைமை ஏற்றனர் .

NFPE சம்மேளனத்தின் முன்னாள் மா பொதுச் செயலர் தோழர்.K .R ., FNPO சம்மேளனத்தின் மா பொதுச் செயலர் தோழர். D . தியாகராஜன் , NFPE சம்மேளனத்தின் உதவிப் பொதுச் செயலர் செயலர் தோழர். ரகுபதி , NFPE அஞ்சல் மூன்றின் செயல் தலைவர் தோழர் NG , உதவிப் பொதுச் செயலர் தோழர் வீரமணி , NFPE தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் செயலர் தோழர்
J.R., FNPO தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் செயலர் தோழர் முத்துக்கிருஷ்ணன் , NFPE அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் (எலெக்ட்) தோழர் ராஜேந்திரன் , NFPE R 3 மாநிலச் செயலர் தோழர் சங்கரன், FNPO
R 3 மாநிலச் செயலர் தோழர் குமார் , NFPE SBCO மாநிலச் செயலர் தோழர் அப்பன்ராஜ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு போராட்டத்தை வாழ்த்திப் பேசினார் .

உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட அஞ்சல் நான்கின் மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும் கோட்ட / கிளைச் செயலர்கள் அனைவரும் அடுத்த கட்ட போராட்டமான அரை ஆடை போராட்டத்தை தமிழகமெங்கும் மிகப் பெரிய அளவில் நூற்றுக்கு நூறு விழுக்காடு வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என்று சூளுரைத்துப் பேசினார் . இறுதியில் லூயில் மணி அவர்கள் நன்றி கூற , ஆர்ப்பாட்ட கோஷங்களுடன் போராட்டம் மாலை 05.00 மணியளவில் இனிதே முடிக்கப் பட்டது .
 
நமது கோட்டதிலிருந்து ஈரோடு கோட்ட P4 செயலர் B. சிவகுமார் மற்றும் கோபி P4 தோழர் S. சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment