MENU BAR

Saturday 7 March 2015

NFPE P 3 தமிழ் மாநிலச் சங்கம் மத்தியச் சங்கத்தோடு இணைந்து கோரிக்கை வைத்துப் போராடியதால் கிடைத்த வெற்றி :

 தேர்வு செய்யப் பட்ட அனைத்து நேரடி எழுத்தர்களையும் உடனடியாக தாற்காலிக (PROVISIONAL ) பணி  நியமனம் செய்யுமாறு CPMG  அவர்கள்,   எழுத்தர் நியமன அடிப்படை சட்டவிதிகளை RELAX செய்து  உத்திரவிட்டுள்ளார்கள். அதாவது அவர்களிடம் இருந்து UNDER TAKING DECLARATION  பெற்றுக் கொண்டு  CERTIFICATE  VERIFICATION  செய்யாமலேயே , சாதிச் சான்று  VERIFICATION செய்யாமலேயே, MEDICAL  CERTIFICATE  பெறாமலேயே ,  POLICE  VERIFICATION  பெறாமலேயே  அவர்களுக்கு  தாற்காலிகப்  பணி  நியமனம் அளித்திடும் உத்திரவே  இது. ஏற்கனவே  நமது மத்திய சங்கத்தின் மூலம்  TRAINING  செல்லாமல் அனைத்து VERIFICATION  முடிக்கப்பட்டால் பணி  நியமனம்  அளிக்கலாம் என்ற உத்திரவை நாம் பெற்றிருந்தாலும்  தற்போது CPMG  , TN  அவர்கள் அளித்துள்ள  உத்திரவு  ஆட்பற்றாக்குறையை வெகுவாகத் தீர்த்திட  உதவும்,  உடனடி  நியமனத்திற்கான உத்திரவாகும். இது  நமது   தமிழ் மாநில  அஞ்சல் மூன்று  சங்கத்தின்  இரண்டு கட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.  உத்திரவின் நகலை கீழே பார்க்கவும்.  இந்த செய்திகளை உடன் நகல் எடுத்து அனைத்து ஊழியர்களுக்கும்   அளிக்கவும்.

No comments:

Post a Comment