MENU BAR

Saturday 12 September 2015

மாநில மாநாட்டில் ஈரோடு கோட்டத்தின் பங்கும், பெருமையும் :



04.09.2015 முதல் 07.09.2015 முடிய நன்கு நாட்கள் புதுகோட்டை மாநகரில் சீரும் சிறப்புமாக நடைபெற்ற நமது P3 சங்க மாநில மாநாட்டில் ஈரோடு கோட்டத்தின் பவானி கிளைச் செயலரான தோழர் A. எழில்வாணன் அவர்கள் மாநில அமைப்புச் செயலராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மாநிலப் பொறுப்பாளராக அவரது பணி சிறக்க ஈரோடு கோட்டம், பவானி கிளை மற்றும் கோபி கிளை P3, P4, GDS (NFPE) சங்ககளின் சார்பான வாழ்த்துக்களைப் பதிவு செய்கிறோம்.

கோபி கிளையைச் சேர்ந்த தோழர் P. மோகனசுந்தரம் அவர்கள் மாநில SUPREME COUNCIL MEMBER ஆக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கும் நம் அனைவரின் சார்பாக வாழ்த்துக்களைப் பதிவு செய்கிறோம்.

தோழர்கள் S. செல்லமுத்து (கோட்டத் தலைவர்) , K. சுவாமிநாதன் (கோட்டச் செயலர்), K. கோபிநாத் (கோட்ட நிதிச் செயலர்), G. சேதுராமன் (கோட்ட உதவிச் செயலர்), V. அருண்குமார்  (கோட்ட உதவிச் செயலர்), A. எழில்வாணன் (பவானி கிளைச் செயலர்), K.சுப்பிரமணியன் (பவானி கிளை உதவித் தலைவர் ), M. மகாலிங்கம் (பவானி GDS NFPE செயலர்), K.பச்சியப்பன் (முன்னால் மாநில அமைப்புச் செயலர்), P. சின்னு கவுண்டர் (கோபி கிளைத் தலைவர்), S.கார்த்திகேயன் (கோபி கிளைச் செயலர்), K.சக்திவேல் (கோபி உதவிச் செயலர்), P.மோகனசுந்தரம் (கோபி உதவிச் செயலர்), A.அன்பரசு (கோபி உதவிச் செயலர்)ஆகியோர் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

K.சுவாமிநாதன் (கோட்டச் செயலர்) மற்றும் A.எழில்வாணன் ஆகியோர் அமைப்பு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு நமது கோட்ட மற்றும் கிளைச் சங்கங்களின் செயல்பாடுகள் குறித்தும், பகுதிவாரிப் பிரச்சினைகள் குறித்தும் , கோட்ட மட்டத்திலும், மாநில மட்டத்திலும் ஒற்றுமை கட்ட வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாகப் பேசினர்.

மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்த பார்வையாளர்கள், சார்பாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். மாநாட்டு ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்த வரவேற்புக் குழுவுக்கும் ஈரோடு கோட்டத்தின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

No comments:

Post a Comment