MENU BAR

Wednesday 9 October 2019

09.10.2019 ஆர்ப்பாட்டம்

🚩 *BONUS மற்றும் DA ஆணையிட வலியுறுத்தி இரண்டாம் நாளாக உணவு இடைவெளி   ஆர்ப்பாட்டம்* 🚩


தோழமைகளே...

நமது மத்திய அரசு ஊழியர் சம்மேளன அறைகூவலின்படி , *BONUS மற்றும் DA ஆணையை உடனடியாக உத்தரவிட* வலியுறுத்தி நமது *மத்திய அரசை கண்டித்து 05.10.2019*  சனிக்கிழமை அன்று நமது ஈரோடு தலைமை அஞ்சலகத்தின் முன்பு ஈரோடு கோட்ட *NFPE, FNPO மற்றும் AIPRPA ஆகிய மூன்று சங்கங்களும் இணைந்து* ஒரு மாபெரும் உணவு இடைவெளி ஆர்ப்பாட்ட இயக்கத்தை நடத்தியுள்ளது...


இரண்டாம் நாளாக 09.10.2019 புதன்கிழமை அன்று மதியம் நமது ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு மீண்டுமோர் உணவு இடைவெளி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

நமது ஈரோடு NFPE  கோட்ட அஞ்சல் JCA convenor தோழர்.K. சுவாமி நாதன் அவர்கள் தலைமையேற்று நடத்த  , ஈரோடு NFPE கோட்டசெயலர் 
தோழர். செல்லமுத்து,ஈரோடு கோட்ட P4 செயலர். தோழர் B. சிவகுமார், AIPRPA கோட்ட செயலர் 
தோழர். N.ராமசாமி ஆகியோர் ஆர்ப்பாட்ட  உரையாற்ற, AIPRPA  தோழர். முருகேசன் அவர்களுடன் தோழமைகள் அனைவரும் கோஷங்கள் முழங்க, இறுதியாக ஈரோடு NFPE கோட்ட
உதவி செயலர் 
தோழியர்.சுபப்ரியா அவர்கள் நன்றியுரையுடன் சிறப்பாக நிகழ்த்த பட்டது இன்றைய ஆர்ப்பாட்ட இயக்கம்...

09.10.2019 மதியமே நமது DAவானது, 5% அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற ஆணை வெளியிடப்பட்டது..
Demonstration allowance என்ற பெயரை அன்றே நமது சங்க முன்னோடிகள் Dearness Allowance ற்கு வைத்துள்ளது மிகச் சரியே என்பது நமது இயக்கங்களும், அதை தொடர்ந்து  வந்த அரசின் ஆணையும் பட்டவர்த்தானமாக உணர்த்துகின்றது....

மேலும் மத்திய அரசானது BONUS ஆணையை உத்தரவிடும் வரை, இனி வரும் அனைத்து நாட்களிலும் இது போன்ற உணவு இடைவெளி ஆர்ப்பாட்ட இயக்கங்கள் தொடரும் என்று இங்கு நாம் கூறிக் கொள்கிறோம்...



போராட்ட இயக்கங்களே ,உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமையை மீட்டெடுத்துத் தரும்...💪



தோழமையுடன்,
*ஈரோடு NFPE P3*🚩

ஆர்ப்பாட்ட இயக்கத்தில் எடுக்கப்பட்ட சில புகைபடங்களை அனைவரின் பார்வைக்கும் கீழே பதிகின்றோம்.






















No comments:

Post a Comment