MENU BAR

Tuesday 1 June 2021

பணிஓய்வு பாராட்டுக்கள்


 


தோழமைகளே..

நமது ஈரோடு கோட்டத்தில், கீழ்கண்ட தோழமைகள் இன்று 31.05.2021 அன்று பணி ஓய்வு பெறுகிறார்கள்..

1. தோழர். K. சுவாமிநாதன் (கோட்ட உதவி செயலர், கோட்ட சங்கத்தின் முன்னாள் செயலர் NFPE P3 ஈரோடு) APM ஈரோடு தலைமை அஞ்சலகம்.

2. தோழர். C சஞ்சீவி (முன்னாள் மண்டல செயலாளர் ,NFPE P3

கோவை மேற்கு மண்டலம்) APM ஈரோடு தலைமை அஞ்சலகம்.

3. தோழர்.P. செங்கோடன், DPM ஈரோடு தலைமை அஞ்சலகம்.

4. தோழர். T. சிவக்குமார், PM,கோபி தலைமை அஞ்சலகம்

5. தோழியர் மாதேஸ்வரி,SPM, நம்பியூர் துணை அஞ்சலகம்

6. தோழர். கருப்பணன்(செயலாளர், NFPE -P4, பவானி) Postman, பவானி தலைமை அஞ்சலகம்.

 

அது சமயம் நமது ஈரோடு தலைமை அஞ்சலகம் சார்பிலும், கோட்ட சங்கத்தின் சார்பிலும்,ஈரோடு HO மனமகிழ் மன்றத்தின் சார்பிலும் மேற்கூறிய முதல் தோழமைகளுக்கு சந்தன மாலை, பொன்னாடையுடனான வாழ்த்துரை வழங்கப்பட்டது..

நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைவரின் பார்வைக்கும் இங்கு பதியப்படுகின்றது..

 

மேலும் பணி மூப்பின் அடிப்படையில் நமது தமிழ்நாடு NFPE P3 சங்கத்தின் மாநில தலைவர் M.செல்வகிருஷ்ணன் (Postmaster, திருநெல்வேலி தலைமை அஞ்சலகம்) அவர்களும் பணி ஓய்வு பெறுகிறார்..

 

நமது ஈரோடு கோட்ட NFPE P3 சங்கத்தின் சார்பில் இன்று பணிஓய்வு பெறும் மேற்கூறிய அனைத்து தோழமைகளுக்கும் வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்ததுக் கொள்கிறோம்..

 

தோழமையுடன்,

ஈரோடு NFPE P3.


















1 comment: